மிளகு கொடி வகை தாவரம்.
இதன் பிறப்பிடம் தென்னிந்தியா என நம்பப்படுகிறது.
மிளகு காய்களை வெந்நீரில் ஊற வைத்து வெளித்தோல் நீக்கப்படுகின்றன.
சதைப்பகுதியும், விதையும் காய்ந்து கருநிறத்தில் மாறுகின்ற நிலையை நாம் மிளகு என அழைக்கிறோம்.
வெண் மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு என வேறு சில வகைகளும் இருக்கின்றன.
தமிழர்கள் உணவில் சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
சளி, இருமல் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு மிளகு இரசம் வைத்து கொடுப்பது தென்னிந்தியர்களின் வழக்கம்.